Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆண்டிபட்டி அருகே பயங்கர விபத்து: சம்பவ இடத்திலே 5 பேர் பலி

ஆண்டிபட்டி அருகே பயங்கர விபத்து: சம்பவ இடத்திலே 5 பேர் பலி
, ஞாயிறு, 6 டிசம்பர் 2015 (10:35 IST)
ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் விளக்கு பகுதியில் தேனியிலிருந்து சென்ற அரசு பேருந்து, ஆட்டோ மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலே 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
 

 
தேனியில் இருந்து நேற்று இரவு அரசு பேருந்து மதுரை நோக்கி சென்றுக்கொண்டு இருந்த போது ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரம் விளக்கு பகுதி அருகே வந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.
 
இந்த விபத்தில் ஆட்டோ பஸ்சுக்கு அடியில் சிக்கி நசுங்கியதால் அதிலிருந்த 3 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலே பலியானார்கள். ஆண்டிப்பட்டியில் மழை பெய்து கொண்டிருந்ததால் எதிரே வந்த வாகனம் தெரியாததால் இந்த விபத்து ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர்  5 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இவர்கள் பற்றிய விபரங்களை ஆண்டிபட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து அரசு பேருந்து டிரைவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்
 

Share this Story:

Follow Webdunia tamil