Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்போ 40 தொகுதி வெற்றி.. மத்தியில் ஆட்சி! இப்போதும் 40 தொகுதி வெற்றி! – திமுக போடும் கணக்கு!

Prasanth Karthick
புதன், 5 ஜூன் 2024 (08:58 IST)
நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளையும் வென்ற திமுக கூட்டணி மத்தியில் ஆட்சி அமைவது குறித்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளோடு விவாதிக்க உள்ளது.



இந்தியாவில் உள்ள 543 தொகுதிகளுக்கும் நடைபெற்ற மக்களவை தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பாஜக கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றிப்பெற்றுள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தமிழகம், புதுச்சேரி சேர்த்து மொத்தம் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளது.

2004ம் ஆண்டில் இதேபோல தமிழகத்தில் கலைஞர் ஆட்சியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு மொத்தமாக 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன. அதற்கு பிறகு 20 ஆண்டுகள் கழித்து தற்போது 40 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி வென்றுள்ளது.

ALSO READ: அமித்ஷா உள்துறை அமைச்சர் ஆகக்கூடாது.. செக் வைக்கிறாரா சந்திரபாபு நாயுடு?

அன்று 40 தொகுதிகளை வென்றபோது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததுடன், 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். இந்நிலையில் இப்போது 40 வெற்றி பெற்றுள்ள நிலையில் மத்தியில் ஆட்சி, மந்திரி பதவி என கருணாநிதி சாதித்ததை மு.க.ஸ்டாலினும் சாதித்து காட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பாஜகவுக்கு தற்போது ஆட்சியமைக்க தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடுதான் ஆட்சியமைக்க வேண்டியுள்ளது. அந்த கூட்டணி கட்சிகளின் ஆதரவை தன்பால் ஈர்க்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. அதற்கு முன்னதாக இன்று இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்வதற்காக மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி புறப்படுகிறார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments