Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குவியல் குவியலாக ரூபாய் நோட்டுகள்: அள்ளிச் சென்ற பொதுமக்கள்

Webdunia
புதன், 16 நவம்பர் 2016 (17:53 IST)
சென்னை ஆவடியில் உள்ள குவியல் குவியலாக 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் கொட்டப்பட்டு இருந்ததை பொதுமக்கள் அவற்றை அள்ளிக்கொண்டு சென்றனர்.


 

ஆவடியில் ராணுவத்துறைக்கு சொந்தமான மைதானத்தில் குவியலாக 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் என ஏறக்குறைய ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கொட்டப்பட்டு கிடந்துள்ளன. காலையில் அவ்வழியாக சென்றவர்கள், அதனைக் கண்டு இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

பின்னர் ஆவடியைச் சுற்றியுள்ள அம்பேத்கார் நகர், கரிமேடு, முத்தாபுதுப்பேட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பணத்தை அள்ளிச்சென்றனர். இது குறித்து பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ராணுவத்துறைக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்பட்டு கிடந்ததால், ராணுவ உயரதிகாரிகள்தான் அங்கு பணத்தை கொட்டியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் பட்டப்பகலில் 20 வயது இளைஞர் மீது துப்பாக்கி சூடு.. ஆம் ஆத்மி கண்டனம்..!

பஹல்காம் தாக்குதல்.. 2 மாதங்களுக்கு பின் இருவரை கைது செய்த NIA.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

தவறான விமான டிக்கெட் வழங்கிய ஸ்பைஸ்ஜெட்.. நுகர்வோர் கோர்ட் அளித்த அதிரடி தீர்ப்பு..!

மனிதர்கள் வாழ தகுதியற்ற நகரம் பெங்களூரு.. தம்பதி வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ வைரல்..!

அமெரிக்க தாக்குதலுக்கு பின் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்.. பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments