Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவு காட்சிகள் ரத்து.. பகல் காட்சிகள் சேர்ப்பு! – திரையரங்குகள் புதிய அட்டவணை!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (09:59 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளால் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திரையரங்குகள் காட்சி நேரத்தை மாற்றியுள்ளன.

தமிழகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருவதால் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திரையரங்குகள் தங்கள் திரையிடல் நேரத்தை மாற்றி தினமும் 4 காட்சிகள் திரையிடுகின்றன. அதன்படி இரவு 10 மணிக்கு ஊரடங்கு தொடங்குவதால் அனைத்து திரையரங்குகளிலும் இரவு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் காலை 11 அல்லது 11.30 மணிக்கு முதல் காட்சி தொடங்கும் நிலையில் தற்போது முதல் காட்சியை காலை 9 அல்லது 9.30 மணி அளவில் தொடங்கும் விதமாக நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பிறகு 12 மணி சராசரியில் ஒரு காட்சியும், 3 மணி சராசரியில் ஒரு காட்சியும், மாலை 6 மணி காட்சிகளும் என மொத்தம் 4 காட்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய கூட்டாட்சியை காக்கும் முக்கியமான நாள்: கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முதல்வர் பேச்சு..!

நெல்லை ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை: பள்ளி மாணவன் கைது

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments