Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய மாணவிக்கு பாலியல் தொல்லை... இளைஞர் கைது!

Webdunia
சனி, 28 ஜனவரி 2023 (18:01 IST)
இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய தோழியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த மாணவி அங்குள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்புப் படித்து வந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்  அவரைக் காணவில்லை என மாணவியின் தந்தை போலீஸில் புகாரளித்தார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், மாணவி பயன்படுத்தி வரும் செல்போன் சிக்னலை வைத்து தேடிய போலீஸார், மாமல்லபுரம் பகுதியில் அப்பெண் இருப்பதைக் கண்டுபிடித்தனர். எனவே, அங்கு சென்று விடுதியில் போலீசார் சோதனை நடத்தினர்.

மாணவியை கடத்தி வந்து பாலியல்தொல்லை கொடுத்த  இளைஞர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து அவரைக்  கைது செய்து,   நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

ரிசல்ட்டுக்கு முன்பாக தமிழகம் வரும் பிரதமர் மோடி! குமரியில் தியானத்தில் ஆழ்கிறார்?

அரசு வேலை வாங்கித் தருகிறேன்.! தாசில்தார் என கூறி பல லட்சம் மோசடி.! கார் ஓட்டுநர் கைது..!!

காதலிக்கு இறுதிச்சடங்கு செய்ய காசில்லை.. பிணத்தை சாலையில் போட்டு சென்ற லிவ்-இன் காதலன்!

ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு ஒத்திவைப்பு..! மே 30-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிமன்றம்..!

சவுக்கு சங்கரை போல் பிரகாஷ்ராஜை கைது செய்ய வேண்டும்: நாராயணன் திருப்பதி..!

அடுத்த கட்டுரையில்