Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலி பேசாத ஆத்திரத்தில் பேருந்தின் கண்ணாடியை உடைத்த இளைஞர்

Webdunia
சனி, 4 மார்ச் 2023 (14:22 IST)
பேருந்து நிலையத்தில் காதலி தன்னிடம் பேசாததால் பேருந்து கண்ணாடியை உடைத்தத இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இன்று  ஒரு இளைஞர் தன் காதலியுடன் நின்றுகொண்டிருந்தார்.

அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளதாகத் தெரிகிறது. இதில், ஆத்திரமடைந்த இளைஞர் அருகில் நின்றிருந்த  அரசுப் பேருந்தின் கண்ணாடியைக் கையால் உடைத்தார்.

இதில், பேருந்தின் கண்ணாடி உடைந்தது. அந்த இளைஞரின் கையிலும் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.

இதுகுறித்து, போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதால் அவர்கள் விரைந்து, சம்பவ இடத்திற்கு வந்து, இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த இளைஞர், தான் சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்தவர்; தற்போது, ஒரு பாலிடெக்னிக்கல்லூரியில் படித்து வருவதாகவும் கூறினார்.

இதுகுறித்து, அப்போக்குவரத்துக் கழகம் புகாரளித்ததை அடுத்து, போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மக்களே..! பறக்கும் ரயில் பாதையில் இனி மெட்ரோ ரயில் சேவை! - எப்போது தெரியுமா?

இந்தியில் பேச முடியாது.. மும்பை செய்தியாளர் சந்திப்பில் நடிகை கஜோல் ஆவேசம்..!

அரசு செய்தி தொடர்பாளர்கள் நியமன வழக்கு தள்ளுபடி.. பாஜக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம்..!

திருமலையில் கட்டவிருந்த மும்தாஜ் ஹோட்டல் இடமாற்றம்.. ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்..!

இந்தியாவை வெறுப்பேற்ற பாகிஸ்தானுடன் அமெரிக்கா நெருங்கிய உறவு.. அசிம் முனீர் மீண்டும் அமெரிக்கா பயணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments