Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்பி எடுக்க ஆசைப்பட்டு எரிமலைக்குள் விழுந்த பெண்! – இந்தோனேஷியாவில் சோகம்!

Prasanth Karthick
புதன், 24 ஏப்ரல் 2024 (10:44 IST)
இந்தோனேஷியாவில் எரிமலை அருகே செல்பி எடுக்க விரும்பிய பெண் எரிமலைக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



சீனாவை சேர்ந்த ஹூவாங் லிஹோங் என்ற பெண்மணியும் அவரது கணவரும் சமீபத்தில் இந்தோனேஷியா சுற்றுலா சென்றுள்ளனர். இந்தோனேஷியாவில் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற நிலையில் தொடர்ந்து கொதிக்கும் எரிமலைகள் 100க்கும் மேல் உள்ளன. இதில் சில எரிமலைகள் அருகே செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

ALSO READ: இங்கிலாந்து போகாதீங்க.. சிக்கினா ருவாண்டாவுக்கு நாடுக்கடத்தல்! – அதிர்ச்சியளிக்கும் புதிய சட்டம்!

அப்படியாக அனுமதிக்கப்பட்ட கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள இஜென் என்ற எரிமலையை சுற்றி பார்க்க சீன தம்பதிகள் சென்றுள்ளனர். அப்போது எரிமலை அருகே செல்பி எடுப்பதற்காக மிக அருகே ஹூவாங் சென்றுள்ளார். மிக அருகில் செல்ல வேண்டாம் ஆபத்து என சுற்றுலா வழிகாட்டி எச்சரித்தபோதும் அதை பொருட்படுத்தாமல் ஹூவாங் அருகில் சென்றபோது பலமான காற்று வீசியதில் பள்ளத்திற்குள் தூக்கி எறியப்பட்டுள்ளார்.

இதனால் 246 அடி பள்ளத்திற்குள் விழுந்த ஹூவாங் பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments