கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி!

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2022 (22:21 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் கள்ளக்காதலனுடன் நெருக்கமாக இருந்ததைப் பார்த்த கணவனை மனைவி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மா நிலம் பரத்பூர் மாவட்டம் சிக்சனா என்ற பகுதியில் வசித்து வந்தவர் பவன். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு,  ரீமா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் வசிக்கும் வீட்டிற்கு அருகில் வசித்து வந்த பகேந்திரா என்ற இளைஞருடன் ரீமாவுக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாகக்கூறப்படுகிறது.

இந்த  நிலையில், ரீமா,  கடந்த மே மாதம் பகேந்திராவை தன் வீட்டிற்கு அழைத்திருந்தார். இருவரும் வீட்டில் உல்லாசமாக இருக்கும்போது, பவன் அவர்கள் இருவரையும் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின், ரீமாவைத் தாக்கும்போது, பகேந்திராவும் ரிமாவும் இணைந்து பவனை கொன்றனர்.

இதையடுத்து, பவனின் சடலத்தை அருகில் உள்ள கால்வாயில் பிளாஸ்டிக்கில் சுற்றி கல்லைக் கட்டிப் போட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வந்த நிலையில் ரீமாவையும், பகேந்திராவையும் கைது செய்துள்ளனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதன் வரை நீடிக்கும் புயல் சின்னம்! சென்னையில் 100 மிமீஐ தாண்டும்: தமிழ்நாடு வெதர்மேன்

தொடர் மழை எதிரொலி.. சென்னையில் இன்று மதியத்திற்கு மேல் பள்ளி விடுமுறையா?

வழக்கம் போல் ஆரம்பித்த சில நிமிடங்களில் முடங்கிய மக்களவை.. எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு..!

நெருங்கும் தேர்தல்!.. மக்களை கவர திமுக அரசு கொண்டுவரும் 3 மெகா திட்டங்கள்!...

திமுக மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையம் பதில் மனு..!

அடுத்த கட்டுரையில்
Show comments