Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கறுப்பு நிறமாக வந்த தண்ணீர் ! அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்

Webdunia
புதன், 10 ஜூலை 2019 (21:03 IST)
கோடை காலம் வந்ததே வந்தது, தமிழ்நாட்டில் தீராத வறட்சியை உண்டுபண்ணிவிட்டது. மக்களும் குடி தண்ணீருக்காக பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். 
தற்போது தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் நதியில்   தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த தண்ணீரானது கோவையில் உள்ள பெருங் குளங்களில் வாய்க்கால்கள் மூலமாகச் சேகரிக்கப்படுகிறது.
 
இந்நிலையில்  கோவைப் பகுதிகளில் உள்ள புறநகர் பகுதிக்கு செல்லும் நொய்யல் நதி தண்ணீரில் சாக்கடை கழிவுநீரும், தொழிற்சாலைகளின் சாயக்கழிவுகளும் கலந்து கொண்டு வருகின்றன.இந்த தண்ணீரை கோவைப் பகுதியைச் சார்ந்த பொதுமக்கள், விவசாயிகள் பயன்படுத்த  முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில்  நொய்யல் நதி நீரானது  தண்ணீர் பட்டணம்புதூரை கடந்து வந்தபோது, தீடீரென்று அது கறுப்பாக நிறம் மாறியது இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
 
பொதுமக்களுக்கு செல்லுல் நீரில் இந்த மாதிரி சாயகழிவு நீரும், தொழிற்சாலைகளும் கலந்தால். அதைப் பயன்படுத்தும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments