Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டில் கொள்ளையடித்த திருடன்.. தனது ஆசிரியர் வீடு என தெரிந்ததும் அதிர்ச்சி!

Prasanth Karthick
வியாழன், 4 ஏப்ரல் 2024 (10:49 IST)
ஆவடியில் வீடு ஒன்றில் திருடிய திருடன் அது தனது ஆசிரியர் வீடு என தெரிந்ததும் வருத்ததில் ஆழ்ந்துள்ளார்.



ஆவடியில் அருகே திருநின்றவூர் சுதேசி நகரை சேர்ந்தவர் 20 வயதான சத்யா. திருட்டு தொழிலில் ஈடுபட்டு வரும் சத்யா மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. சமீபத்தில் திருநின்றவூர் தாசர்புரம் 3வது தெருவில் ஆள்நடமாட்டம் இல்லாமல் வீடு ஒன்று இருப்பதை நோட்டமிட்ட சத்யா இரவில் வீடு புகுந்து 40 பவுன் நகை, ரூ30 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றுள்ளார்.

இதுகுறித்து அந்த வீட்டின் உரிமையாளரும் அரசு உதவிப்பெறும் ஆசிரியர் கிருபை ஜானும், அவரது மனைவியும் ஆசிரியருமான தீபம் அவர்களும் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்ட போலீஸார் சத்யாவை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

அப்போதுதான் சத்யாவிற்கு தான் திருடியது தனது முன்னாள் ஆசிரியர் வீட்டில் என தெரிய வந்துள்ளது. கிருபை ஜானின் மனைவி தீபத்திடம் சத்யா 7ம் வகுப்பு வரை மாணவனாக படித்தவர். தனது ஆசிரியர் வீடு என தெரியாமல் திருடி விட்டதாக வருந்திய சத்யாவிடம் இருந்து 24.5 பவுன் நகை, 25 கிராம் வெள்ளி, மற்றும் ரூ.60 ஆயிரம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments