Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுவாதி படுகொலை: குற்றவாளியை நேரில் பார்த்த சுவாதியின் தோழி

சுவாதி படுகொலை: குற்றவாளியை நேரில் பார்த்த சுவாதியின் தோழி
, புதன், 29 ஜூன் 2016 (11:38 IST)
சுவாதியை கொலை செய்த மர்ம நபரை ஏற்கனவே நேரில் பார்த்துள்ளதாக சுவாதியின் தோழி காவல் துறையினரிடம் கூறியுள்ளார்.


 

 
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடைப்பெற்ற சுவாதி கொலையில் குற்றவாளியை கண்டுபிடிக்க காவல் துறையினர் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். பல கோணங்களில் அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் சுவாதியை கொலை செய்ததாக கருதப்படும் அந்த மர்ம நபரை கருதப்படும் சுவாதியின் தோழி ஏற்கனவே பார்த்திருப்பது காவல் துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணையில், கொலை செய்த அந்த நபர் சுவாதியை ஒரு மாத காலமாக பின் தொடர்ந்திருப்பதும், அதை சுவாதி தனது தோழிகளிடம் கூறியிருப்பதும் தெரியவந்துள்ளது.
 
இதையடுத்து சுவாதி தோழி மூலம் அந்த மர்ம நபரின் படத்தை வரையும் முயற்சி நடைப்பெற்று வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அம்மா, அப்பாவே என்னை நம்பாதப்போ, உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம்? - சிக்கியது வினுப்பிரியா கடிதம்