Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடிவதற்குள் 21 மாவட்டங்களை குளிப்பாட்ட போகும் மழை! – வானிலை ஆய்வு மையம்!

Prasanth Karthick
ஞாயிறு, 2 ஜூன் 2024 (19:32 IST)
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காரணமாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கான மழை வாய்ப்பு அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.



தமிழ்நாட்டில் ஏப்ரல் முதலாக கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் மே மாதம் பாதியிலிருந்தே பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழையும் தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில், செங்கல்பட்டு, திருவள்ளூர், ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, வேலூர், திருச்சி, பெரம்பலூர், திருநெல்வேலி, கோவை, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 21 மாவட்டங்களில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகங்கை அஜித் குமார் லாக்-அப் டெத் வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரான நோவா ஸ்மார்ட்போன்.. ஜூலை 5ல் ரிலீஸ். என்னென்ன சிறப்புகள்?

நாளை முதல் ரயில் கட்டணம் உயர்வு.. ஒரு கிமீ-க்கு எவ்வளவு? பயணிகள் அதிர்ச்சி..!

தேனிலவு கொலை எதிரொலி: மேகாலயாவுக்கு சுற்றுலா வருபவர்களுக்கு புதிய அறிவுரைகள்..!

ரூ.100 கோடி செலவில் சாலை போட்ட லட்சணம் இதுதானா? சாலை நடுவே கம்பீரமாக நிற்கும் மரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments