Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிவபெருமானை சந்திக்க சுடுகாட்டில் 10 அடி பள்ளம் தோண்டிய கிருஷ்ணன்

சிவபெருமானை சந்திக்க சுடுகாட்டில் 10 அடி பள்ளம் தோண்டிய கிருஷ்ணன்

சிவபெருமானை சந்திக்க சுடுகாட்டில் 10 அடி பள்ளம் தோண்டிய கிருஷ்ணன்
, வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (18:21 IST)
புதுக்கோட்டை அருகே முத்து கிருஷ்ணன் என்பவர் சுடுகாட்டில் 10 அடியில் பள்ளம் தோண்டி சிவபெருமானை சந்திக்க போவதாக அரை நிர்வாணத்தில் தவம் மேற்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த முத்து கிருஷ்ணன்(55) என்பவர் அறந்தாங்கியில் இந்து பரிஷத் அமைப்பின் நகர செயலாளராக இருக்கிறார்.
 
இவர் கடந்த 2ஆம் தேதி சுடுகாட்டு பகுதியில் 10 அடிக்கு பள்ளம் தோண்டி அதில் அரை நிர்வாணமாக அமர்ந்துக்கொண்டு சிவபெருமானை சந்திக்க தவத்தை தொடங்கியுள்ளார்.
 
நேற்று முன்தினம் முத்து கிருஷ்ணனின் தவம் குறித்து அறிந்த ஊர் மக்கள், அறந்தாங்கி காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். காவல் துறையினர் அவரை சந்தித்து தவத்தை கைவிடுமாறு கூறியுள்ளனர். 
 
ஆனால் நேற்று அதிகாலைதான் அவர் தவத்தை முடித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் காவல் துறையினரிடம் தற்போது அம்பாள் எனக்கு காட்சி தந்ததால் தவத்தை முடித்துக் கொண்டேன், சிவபெருமானை சந்திக்க மீண்டும் வேறொரு இடத்தில் தவம் மேர்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோடீஸ்வர முதல்வர்களில் சந்திரபாபு நாயுடு முதலிடம்