Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பனை மரத்தில் தலைகீழாக தொங்கிய நபர் ! அதிரவைக்கும் சம்பவம்

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2019 (14:30 IST)
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கணேஷ் (50 ) என்பவர் தினமும் பனை மரம் ஏறும் கூலித் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
அன்றாடம் பனைமரம் ஏறினால் தான் குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்பதால் நேற்று, கணேஷ் அருகில் உள்ள தோப்பில் பனைமரத்தில் இருந்து பதனீர் எடுக்க மரத்தில் ஏறினார்.
 
வழக்கம் போல மரம் ஏறியவர் திடீரென்று உச்சியில் தலைகீழாக தொங்கினார்.  அதைப் பார்த்த மக்கள் பதறியடித்து போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர்.
 
அடுத்த சில நிமிடங்களில் போலீஸாருடன், தீயணைப்புத்துறையினரும் வந்து மரத்தில் தொங்கிய நிலையில் இருந்த கணேஷனை கீழே இறக்க பல முயற்சிகள் எடுத்தனர்.அதில் தீயணைப்புத்துறையில் ஒருவர் மேலே ஏறி முயன்றார். ஆனால் உச்சியில் எடை தாங்காது என்பதால் அம்முயற்சியும் கைவிடப்பட்டது.
 
தீயணைப்புத்துறையினரிடம் உயரமான ஏணி இல்லாததால் அடுத்து கணேஷ்  கீழே விழாமல் இருக்க வலையை பரவலாக விரித்தனர்.
 
பின்னர் ஜேசிபி கொண்டு வரச் செய்து மரத்தில் மோதச் செய்து கணேஷை வலையில் விழச் செய்தனர். பின் அவசரமாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
 
அங்கு, கணேசன் ஏற்கனவே மாரடைப்பு வந்து இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். கணேசன் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
இதுபற்றி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக வேட்பாளர்களாக முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்.. களை கட்டும் தேர்தல்..!

ஹனிமூன் சென்ற தம்பதி மாயம்! கணவன் சடலம் பள்ளத்தாக்கில்.. மனைவி எங்கே? - மேகாலயாவில் அதிர்ச்சி சம்பவம்!

அல்லு அர்ஜுனைக் கைது செய்தீர்களே?... இப்போ விராட் கோலியை கைது செய்வீர்களா?- ரசிகர்கள் கொந்தளிப்பு!

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments