Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தள்ளி போகும்....பள்ளிக் கல்வித்துறை திட்டம்

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (15:46 IST)
தமிழகத்தில்  கோடை மாத விடுமுறைக்குப் பின் மீண்டும் பள்ளிகள் திறப்பது தள்ளி போகும் என தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் 10, 11 , 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தற்போது முடியும் தருவாயில் உள்ளது.

1 முதல் 9 ஆம் வகுப்பு உள்ள மாணவர்களுக்குப் பள்ளி இறுதி தேர்வு முடிந்து, 14 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் அரசு, உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், பிளஸ் 2, பிளஸ் 1  பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக விடைத்தாள் திருத்தும் பணி, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் காரணமாக ஜுன் மாதம் இறுதியில்தான் பள்ளிகள் திறக்கப் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுகவில் இணைந்த ராமநாதபுரம் இளைய மன்னர் ராஜா நாகேந்திர சேதுபதி.. ஈபிஎஸ் வரவேற்பு

அரிவாளால் வெட்ட முயன்ற சிறுவனை துப்பாக்கியால் சுட்ட உதவி ஆய்வாளர்.. நெல்லையில் பரபரப்பு..!

மாதம் 44 ஆயிரம் சம்பளம்..! ரயில்வேயில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு! - முழு விவரம்!

யார் கையிலயும் காசு இல்ல.. டிஜிட்டல் பே மூலம் பிச்சை! அப்டேட் ஆன பிச்சைக்காரர்!

203 ஆசிரியர்கள் நியமனம்.. 202 பேர் போலி சான்றிதழில் வேலைக்கு சேர்ந்ததால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments