Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தள்ளி போகும்....பள்ளிக் கல்வித்துறை திட்டம்

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (15:46 IST)
தமிழகத்தில்  கோடை மாத விடுமுறைக்குப் பின் மீண்டும் பள்ளிகள் திறப்பது தள்ளி போகும் என தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் 10, 11 , 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தற்போது முடியும் தருவாயில் உள்ளது.

1 முதல் 9 ஆம் வகுப்பு உள்ள மாணவர்களுக்குப் பள்ளி இறுதி தேர்வு முடிந்து, 14 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் அரசு, உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், பிளஸ் 2, பிளஸ் 1  பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக விடைத்தாள் திருத்தும் பணி, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் காரணமாக ஜுன் மாதம் இறுதியில்தான் பள்ளிகள் திறக்கப் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments