Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் அதிகாரி எனக் கூறி நகைகளைத் திருடிய கும்பல்

Webdunia
ஞாயிறு, 17 டிசம்பர் 2017 (17:49 IST)
நகைக்கடை ஊழியரை நூதன முறையில் ஏமாற்றி, கொள்ளையர்கள் அவரிடமிருந்து 9 சவரன் நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள நகைக் கடையில் பணிபுரிபவர் லக்‌ஷ்மன். இவர் 9 சவரன் நகைகளை ஹால்மார்க் செய்வதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். தியாகராய நகர் அருகே சென்ற போது அவரை வழிமறித்த ஒரு கும்பல் தங்களை தேர்தல் பறக்கும் படையினர் எனக் கூறி அவரை சோதனை செய்துள்ளனர்.
 
அதன்பிறகு கடைக்குச் சென்ற லக்‌ஷ்மன் பையில் நகை இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து மாம்பலம் காவல் நிலையத்திற்கு சென்ற அவர் நடந்தவற்றை போலீஸாரிடம் கூறினார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூட்டம் நிறைந்த பகுதியில் கொள்ளையர்கள் தங்களின் கைவைரிசையை காட்டியிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் ரிசல்ட் வரும் முன்பே விண்ணப்பிக்கலாம்.. எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பம் தொடக்கம்..!

கிரிக்கெட்டுக்கு இது ஒரு துயரமான நாள்: 11 பேர் பலி குறித்து அனில் கும்ப்ளே வேதனை..!

பாகிஸ்தானுக்கு சென்று போரிலா ஜெயித்துவிட்டீர்கள்.. ஏன் இந்த கொண்டாட்டம்.. ஆர்சிபி ரசிகர்களுக்கு கண்டனம்.!

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments