பிரதமரால் இன்று திறக்கப்பட்ட திருச்சி விமான நிலையத்தில் என்னென்ன சிறப்புகள்?

Webdunia
செவ்வாய், 2 ஜனவரி 2024 (14:07 IST)
பிரதமர் மோடி இன்று திருச்சியில் அமைந்துள்ள புதிய விமான நிலையத்தை திறந்து வைத்த நிலையில் இந்த விமான நிலையத்தில் என்னென்ன சிறப்புகள் என்பதை பார்ப்போம்.

1. திருச்சி விமான நிலையம் 60 ஆயிரத்து 723 ச.மீ பரப்பளவில் 2 அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளது.

2. ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பன்னாட்டு பயணிகள்,  1500 உள்நாட்டுப் பயணிகளை கையாள்வதற்கு 40 செக் அவுட் மற்றும் 48 செக் இன் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

3. விமானங்களை நிறுத்த 10 ஏப்ரான்கள், ஏரோ பிரிட்ஜ்,  26 இடங்களில் லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டர்கள்   அமைக்கப்பட்டுள்ளது.

4.  3 சுங்கத்துறை பரிசோதனை மையங்கள், 15 எக்ஸ்ரே சோதனை மையங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

5.  3 இடங்களில் விஐபி காத்திருப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது,

6. ஒரே நேரத்தில் 1000 கார்களை நிறுத்தும் வகையில் பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது.

7. ரூ.75 கோடி செலவில் 42.5 மீட்டர் உயரம் கொண்ட கண்காணிப்பு கோபுரத்துடன் கூடிய வான் கட்டுப்பாட்டு அறை உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல போர்களை முடிவுக்கு கொண்டு வந்து ட்ரம்புக்கு நோபல் பரிசு இல்லையா? வெள்ளை மாளிகை கண்டனம்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்.. பெண் காவல் ஆய்வாளர் இடமாற்றம்.!

நோபல் கிடைக்காவிட்டாலும் மகிழ்ச்சியில் ட்ரம்ப்! வெனிசுலாதான் காரணமா?

20 லட்சம் கடன் தருவதாக கூறி லட்சக்கணக்கில் ஏமாந்த நபர்.. மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி?

குறைவது போல குறைந்து மீண்டும் உயர்ந்த தங்கம்! தற்போதைய விலை நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments