Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெயில் மேலும் கொளுத்தும் : பயமுறுத்தும் வானிலை மையம்

வெயில் மேலும் கொளுத்தும்

வெயில் மேலும் கொளுத்தும் : பயமுறுத்தும் வானிலை மையம்
, செவ்வாய், 3 மே 2016 (17:33 IST)
தமிழகத்தில் அக்னி நட்சத்திரத்தில் தற்போது உள்ளதை விட, வெயில் மேலும் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.


 

 
தற்போது கோடைக்காலம் என்பதால், வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. வெயில் கொடுமை தாங்க முடியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். நிறைய உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
 
இந்நிலையில் கத்திரி வெயில் என அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் நாளை தொடங்கி இம்மாதம் 28ஆம் தேதி வரை நீடிக்கிறது. 
 
இதுபற்றி கருத்து தெரிவித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் “ தமிழகத்தில் தற்போது ஈரப்பதம் குறைந்து வறண்ட சூழ்நிலை நிலவுகிறது. எனவே அக்னி நட்சத்திரத்தில் வெயில் மிகவும் அதிகரிக்கும். தற்போது உள்ளதை விட 2-3 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும். சென்னையிலும் வெப்பநிலை அதிகரிக்கும். மேலும், மழை பெய்யும் வாய்ப்பும் இல்லை” என்று கூறினார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆட்டம் ஆரம்பமானது : கமல் பட தலைப்பிற்கு விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு