திட்டுபவர் திட்டட்டும் அரசு தன் கடமையை சிறப்பாக செய்கிறது! - நடிகர் வடிவேலு புகழாரம்!

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2023 (15:50 IST)
தமிழக அரசு தனது பணியை சிறப்பாக செய்து வருவதாக நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.


 
பசுமை சைதை திட்டத்தின் கீழ் மிக்ஜாம் புயலின் தாக்கத்தினால் வீழ்ந்த மரங்களை ஈடு செய்யும் வகையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களின் ஏற்பாட்டில் சைதாப்பேட்டை தொகுயில் 5000 மரங்களை நடும் நிகழ்வு சைதாப்பேட்டை தாடண்டர் நகரிலுள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக  நடிகர் வடிவேலு கலந்து கொண்டு மரத்தினை நட்டு துவக்கி வைத்தார். தொடர்ந்து மேடையில் பேசிய அவர்,  தமிழ்நாடு அரசு பல சோதனைகளை சந்திக்கிறது எனவும் சென்னையில் புயலை அரசியலாக்கிவிட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

ஆனால் தென்மாவட்ட மழையில் அவ்வாறு செய்ய இயலவில்லை என குறிப்பிட்ட அவர்,  இயக்குனர் மாரிசெல்வராஜ் ஏன் அங்கு செல்கிறார் என சிலர் கேட்கிறார்கள். அது அவருடைய ஊர் அவர் செல்லாமல் எப்படி இருப்பார் என்று வடிவேலு கேள்வி எழுப்பினார். மழை பெய்துக்கொண்டிருக்கும் போது தமிழக அரசு சிறப்பான பணிகளை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் வடிவேலு, உலகமே நம்மை பாராட்டினாலும் நம்மை திட்டுவதற்கு நான்கு பேர் இருப்பார்கள் அதுபோலத்தான் இதுவும் திட்டுபவர்கள் திட்டிக் கொண்டே இருக்கட்டும் அரசாங்கம் தன் கடமையை சிறப்பாக செய்யும் என குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக் கடலில் தாழ்வு மண்டலம்.. 16 மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை !

தமிழ்நாட்டில் கள்ளத்துப்பாக்கிகள் 5000 ரூபாய்க்கு கூட கிடைக்கிறது: சேலம் கொலை குறித்து அன்புமணி..!

திமுகவுடன் தான் காங்கிரஸ் கூட்டணி.. 5 பேர் கொண்ட குழு அமைத்து உறுதி செய்த செல்வபெருந்தகை..!

இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. செஞ்சுரி அடிக்க போகும் டிரம்ப்..

நாளை மீண்டும் மக்களை சந்திக்கும் விஜய்.. 2000 பேருக்கு மட்டும் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments