Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாமக்கல் அதிமுக கவிஞர் முத்துசாமிக்கு அதிமுக சார்பில் ரூ. 5 லட்சம் நிதி உதவி

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2015 (05:58 IST)
நாமக்கல் அதிமுக கவிஞர் முத்துசாமிக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
 

 
இது குறித்து, அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
 
நாமக்கல் மாவட்டம், ஆர்.புதுப்பட்டி பேரூராட்சியை சேர்ந்த திரைப்பட பாடலாசிரியர், தமிழறிஞர் கவிஞர் பி.கே.முத்துசாமி தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக பணியாற்றி எண்ணற்ற முன்னோடி சாதனைகளை படைத்துள்ளார்.
 
அவரது பல்வேறு நூல்கள் மற்றும் கவிதைகளை போற்றும் வகையில், அவருக்கு  பரிசாக 5 லட்ச ரூபாயும், 96 வயதிலும் தொடரும் அவரது மொழி ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாயும் வழங்குமாறு அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டார்.
 
முதல்வரின் உத்தரவுப்படி, அதிமுக பொருளாளரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், நாமக்கல் மாவட்ட செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான பி.தங்கமணி ஆகியோர் முத்துசாமி இல்லத்திற்கு சென்று ரூ.5 லட்சத்திற்கான வரைவோலை அளித்தனர் என கூறப்பட்டுள்ளது. 
 

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments