Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூடு பிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்..! ஏப்ரல் 4-ல் அமித் ஷா தமிழக வருகை..!!

Senthil Velan
வியாழன், 28 மார்ச் 2024 (15:02 IST)
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக ஏப்ரல் 4 ஆம் தேதி தமிழகம் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
தேசிய தலைவர்களும் தமிழகத்துக்கு வந்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் முதல் வாரத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
பாஜக வேட்பாளர்கள் ஆதரித்து பிரதமர் மோடியும் பிரச்சாரம் மேற்கொள்ள மீண்டும் தமிழகம் வருகிறார்.  இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக ஏப்ரல் 4 ஆம் தேதி தமிழகம் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ALSO READ: டெல்லி முதல்வராக கெஜ்ரிவால் தொடருவார்..! பதவி நீக்கம் கோரிய மனு தள்ளுபடி.!!

ஏப்ரல் 4 ஆம் தேதி  மதுரை, சிவகங்கை தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளும் அமித்ஷா, 5 ஆம் தேதி சென்னையில் பிரச்சாரம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments