Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாய் குறுக்கே வந்ததால் பிரேக் போட்ட ஓட்டுனர்: கண்டக்டர் பரிதாப பலி!

dead
, செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (12:45 IST)
நாய் குறுக்கே வந்ததால் பேருந்து ஓட்டுனர் திடீரென பிரேக் போட்டதால் கண்டக்டர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சேலம் மாவட்ட பசவக்கல் என்ற பேருந்து நிறுத்தம் அருகே அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தபோது திடீரென நாய் குறுக்கே வந்தது. இதனால் ஓட்டுனர் பிரேக் போட்டதால் முன் பக்க படிக்கட்டு அருகே நின்றிருந்த நடத்துனர் பேருந்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார்
 
இதனை அடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்த விட்டதாக தெரிகிறது. அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
நாயை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பிரேக் போட்ட ஓட்டுநரால், நடத்துநர் பரிதாபமாக பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்ரீமதி மரணம் குறித்து 2 தோழிகள் ரகசிய வாக்குமூலம்: நீதிமன்றத்தில் பரபரப்பு!