Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 27 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் தொற்று! – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2023 (08:52 IST)
சென்னை ராயபுரம் பகுதியில் 27 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.



சமீப காலங்களில் நகரங்களின் பல பகுதிகளில் தெரு நாய்களின் நடமாட்டம் அதிகமாக உள்ள நிலையில் நாய்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை ராயபுரம் பகுதியில் நாய் ஒன்று நேற்று ஒருநாளில் மட்டும் 20க்கும் மேற்பட்டோரை கடித்ததால் பெரும் பரபரப்பு எழுந்தது.

மக்களை அச்சுறுத்தி வந்த அந்த நாய் பிடிக்கப்பட்ட நிலையில் அதற்கு ரேபிஸ் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் நாயால் கடி வாங்கிய 27 பேரும் 5 டோஸ் தடுப்பூசிகள் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாயை போலவே மற்ற நாய்களுக்கும் ரேபிஸ் தொற்று பரவியிருக்கலாம் என மக்களிடையே அச்சம் எழுந்துள்ள நிலையில் தெரு நாய்களிடையே ரேபிஸ் பரவுவதை கண்டறிந்து கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ராக்கி கயிறு கட்டிய பெண் போலீஸ்.. நெகிழ்ச்சி சம்பவம்..!

ஒரு சொல்லுக்கு பொருள் தெரியாதவரை கவிப்பேரரசு என அழைப்பதா? வைரமுத்துவுக்கு பாஜக கண்டனம்..!

மீண்டும் எடப்பாடியுடன் இணைய திட்டமா? டிடிவி தினகரன் கூறிய பதில்..!

இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

முன்னேற்றத்தை பாத்து வயிற்றெரிச்சல்! அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம்! - அமெரிக்காவுக்கு வெங்கயா நாயுடு கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments