Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பிணி பசுக்களை விஷம் வைத்து கொன்ற கொடுமை! – மதுரையில் அதிர்ச்சி!

Webdunia
புதன், 1 நவம்பர் 2023 (10:53 IST)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லுத்தேவன்பட்டியைச் சேர்ந்தவர் பின்னியம்மாள்., விவசாய கூலி தொழிலாளியான இவர் 3 பசுமாடுகளை வைத்து பால் விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்.


 
இந்நிலையில் தற்போது இவரது 3 பசுமாடுகளும் கர்ப்பமாக இருந்தாக கூறப்படுகிறது, இன்னும் சில தினங்களில் கன்றுகளை ஈன்றெடுக்கும் நிலையில் இருந்த இந்த பசுமாடுகளை நேற்று வழக்கம் போல தனது தோட்டத்து பகுதியில் மேய்ச்சலுக்காக அழைத்து சென்றுவிட்டு இரவு பசுமாடுகளுக்கு நீர் வைத்துவிட்டு உறங்கியதாக கூறப்படுகிறது.

காலையில் எழுந்து பார்த்த போது அவரது 3 பசுமாடுகளும்,ஒரு ஆட்டுக் குட்டியும் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பின்னியம்மாள் போலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் மற்றும் கால்நடை மருத்துவர்கள் பசுமாடுகள் அருந்திய குடிநீரில் யூரியா எனும் விஷம் கலந்திருப்பதை கண்டறிந்த நிலையில் விஷம் கலந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

கர்ப்பிணி பசுமாடுகளுக்கு குடிநீரில் விஷம் வைத்து படுகொலை செய்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments