Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் விரோத அரசை வீழ்த்தவே கூட்டணி : ஸ்டாலின்

Webdunia
சனி, 10 நவம்பர் 2018 (07:58 IST)
அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு  இப்போதே கட்சிகள் கூட்டணியில் இணையத் துவங்கிவிட்டனர்.
 
சில நாட்களுக்கு முன் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு நீண்ட நாட்களுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்தார்.
மேலும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளூமன்ற  தேர்தலுக்கு மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார்.
 
அதற்கு முக்கியமான காரணம் தற்போதைய ஆளும் மத்திய அரசுடன் அவருக்கு உண்டான கசப்புணர்வே ஆகும்.
 
அதனால் எப்படியும் மோடி அரசை வீழ்த்தியே தீர வேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டு இந்தியாவில் உள்ள கட்சித்தலைவர்களை சந்தித்து வருகிறார்.
 
இந்நிலையில் நேற்று சென்னைக்கு வந்த அவர் திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
 
அப்போது இருவரும் இணைந்து செய்தியாளரகளுக்கு பேட்டி கொடுத்தனர்.
அப்பொது ஸ்டாலின் கூறியதாவது:
 
மக்கள் விரோத அரசை வீழ்த்த வேண்டும் என்பதற்காக சந்திரபாபு நாயுடு இந்த கூட்டணியை அமைகும் முயற்சியை மேற்கொள்கிறார்.
 
மோடியின் ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இதனை தடுத்து நிறுத்த அனைத்து மாநிலங்களிலும் உள்ள தலைவர்களை சந்தித்து கூட்டணிக்காக ஒன்றிணைந்து வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments