Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி நதிநீர் பிரச்சினை! அனைத்து கட்சி கூட்டத்திற்கு நீங்கள்தான் தலைமை ஏற்க வேண்டும்! - முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

Senthil Velan
திங்கள், 15 ஜூலை 2024 (15:30 IST)
காவிரி பிரச்சினை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடத்தப்பட்டால்தான் காவிரி விவகாரத்தில் தமிழகம் எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதை கர்நாடகத்துக்கும் மற்றவர்களுக்கும் காட்ட முடியும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 8000 கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக அரசு அறிவித்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்டியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்தக் கூட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று பங்கேற்காமல் ஒதுங்கியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
 
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கக் கூடிய, காவிரியில் தமிழகத்தின் உரிமையை பறிக்கக் கூடிய செயலை செய்வதற்கான கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தையே அம்மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா தலைமையேற்று நடத்துகிறார். அனைத்துக் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உழவர் அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்டவர்களை அழைத்து கலந்தாய்வு நடத்துகிறார்.
 
அதேபோல், தமிழகத்திலும் காவிரி பிரச்சினை குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டம் முதல்வர் தலைமையில் நடைபெற்றால்தான் அதற்கு முக்கியத்துவம் கிடைக்கும். காவிரி பிரச்சினை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடத்தப்பட்டால்தான் காவிரி விவகாரத்தில் தமிழகம் எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதை கர்நாடகத்துக்கும் மற்றவர்களுக்கும் காட்ட முடியும்.
 
எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடியை காப்பாற்ற வேண்டும்; தமிழகத்தின் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரத்தை பாதுகாக்க வேண்டும் போன்ற நோக்கங்களைக் கருத்தில் கொண்டு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்த வேண்டும் என்று அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

ALSO READ: மீண்டும் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி, சொமேட்டோ.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!!
 
காவிரி பிரச்சனை தொடர்பாக ஆலோசிக்க சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நாளை அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

மணிப்பூரில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு.. இயல்பு நிலை திரும்புகிறதா?

திருமணம் முடிந்தவுடன் மணப்பெண்ணிடம் நூறு ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி டீல் போட்ட மணமகனின் நண்பர்கள் பட்டாளம்!

அடுத்த கட்டுரையில்
Show comments