Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போலீஸ் வாகனம் மீது பிறந்தநாள் போஸ்டர் ஒட்டிய தேமுதிகவினர் மீது வழக்கு

போலீஸ் வாகனம் மீது பிறந்தநாள் போஸ்டர் ஒட்டிய தேமுதிகவினர் மீது வழக்கு
, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2015 (16:33 IST)
போலீஸ் வாகனம் மீது போஸ்டர் ஒட்டியதாக தேமுதிகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி அவரது கட்சித் தொண்டர்கள் பல இடங்களில் வாழ்த்து தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். உற்சாக மிகுதியில்  நேற்றி இரவு தொண்டர்கள் சிலர் மயிலாப்பூர் காவல் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனம் ஒன்றிலும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இன்று காலையில் இதனை பார்த்த போலீசார் போஸ்டரை ஒட்டியவர்கள் யார்? என்பது பற்றி விசாரணை நடத்தினர். அப்போது தே.மு.தி.க.வை சேர்ந்த ஏழுமலை மற்றும் அப்பகுதியில் போஸ்டர் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வரும் கமலக்கண்ணன் ஆகியோர் தான் விஜயகாந்த் பிறந்தநாள் போஸ்டரை ஒட்டியிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து இவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil