Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னியாகுமரியில் படகுக் கட்டணம் உயர்கிறது

Webdunia
சனி, 30 மே 2015 (02:24 IST)
கன்னியாகுமரியில், விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்ல ஜூன் 1ஆம் தேதிமுதல் படகுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.


 
கன்னியாகுமரியில், கடலுக்கு நடுவே, மிக அழகாக விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும், வானளாவிய திருவள்ளுவர் சிலையையும் உள்ளது.  தமிழகத்தில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தினசரி பல ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.
 
சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் குகன் மற்றும் பொதிகை மற்றும் விவேகானந்தா ஆகிய மூன்று படகுகளை காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை இயக்கி வருகிறது.
 
 
இதுவரை இந்த படகுளில்  சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்ய, பெரியவர்களுக்கு ரூ.34 ம், மாணவர்களுக்கு ரூ.17 ம் வசூல் செய்யப்பட்டது. மேலும், வரிசையில் நிற்காமல் செல்ல விரும்புவர்களுக்கு என சிறப்புக் கட்டணமாக ரூ.169 வசூலிக்கப்பட்டது.
 
இந்நிலையில், மத்திய அரசு சேவை வரியை 12.36 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக உயர்த்தியுள்ள காரணத்தினால், படகுக் கட்டணத்தையும் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் ஜூன் 1 ஆம் தேதிமுதல் உயர்த்தியுள்ளது. அதன்படி, பெரியவர்களுக்கு ரூ.35 ம், மாணவர்களுக்கு ரூ.18 ம்  வசூல் செய்யப்படும். மேலும், வரிசையில் நிற்காமல் செல்ல விரும்புவர்களுக்கு என சிறப்புக் கட்டணமாக ரூ.171 உயர்த்தப்பட்டுள்ளது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments