Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவிலிருந்து வந்தவர்களுக்கு பதவியா என அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு......

J.Durai
செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (11:56 IST)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை அதிமுக பேரூர் கழகத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா,  முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
 
இந்நிகழ்வில் கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் வழங்கி கொண்டிருந்த போது, 2 மற்றும் 10,12 வது வார்டு பகுதியில் ஒவ்வொரு வார்டிலும் இரு கிளைச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், யார் உறுப்பினர் அடையாள அட்டையை பெருவது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 
அப்போது திமுகவில் இருந்து வந்தவர்களுக்கு பதவி வழங்குவதா எனவும், அவர்களிடமிருந்து நாங்கள் உறுப்பினர் அட்டையை பெறுவதா என மூத்த அதிமுக நிர்வாகிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 
இதனை கண்டு ஆத்திரமடைந்த ஆர்.பி.உதயக்குமார், வாக்குவாதம் செய்தவர்களை கோபத்துடன் கண்டித்து சமாதானப்படுத்தி, தானே மைக் மூலம் ஒவ்வொரு வார்டு நிர்வாகிகளையும் அழைத்து உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார்.
 
முன்னாள் அமைச்சர் முன்னிலையிலேயே திமுகவிலிருந்து வந்தவர்களுக்கு பதவியா என அதிமுகவினர் வாக்குவாதம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது பா.ஜ.க.வின் கடமை - நெல்லையில் அண்ணாமலை உரை

அமித்ஷா முன்னிலையில் பாஜகவுக்கு தாவிய திமுக பிரபலம்! - தொண்டர்கள் அதிர்ச்சி!

அங்கிள் என கூறிய விஜய்.. அண்ணாச்சி என கூறிய நயினார் நாகேந்திரன்.. திமுகவினர் ஆத்திரம்..!

உதயநிதி முதல்வராகவும் முடியாது.. ராகுல் காந்தி பிரதமராகவும் முடியாது: அமித்ஷா

கல்வி உதவித்தொகை என்ற பெயரில் புதிய மோசடி: UPI மூலம் பணத்தை இழந்த மாணவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments