தினகரனுக்கு என் வளர்ச்சியின் மீது பொறாமையாக இருக்கலாம்:தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி

Webdunia
வியாழன், 27 ஜூன் 2019 (11:25 IST)
அமமுக கட்சியிலிருந்து விலக்கப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன், தினகரனுக்கு தன் வளர்ச்சியின் மீது பொறாமையாக இருக்கலாம் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தன்னுடைய பேட்டியை அளித்த தங்க தமிழ்செல்வன், தன்னை கட்சியிலிருந்து நீக்குவதற்கு ஏற்கனவே கட்சியின் தலைவர் டி.டி.வி. தினகரன் முடிவு எடுத்த பிறகு தான் சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி வீணாக பல பொய்கள் பரப்பபட்டது என கூறியுள்ளார்.

அதன் பின்பு அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் தங்க தமிழ்செல்வனிடம் “தினகரன் உங்களின் வளர்ச்சியை கண்டு பொறாமை படுகிறாரா?” என கேட்ட போது, “அவர் என் வளர்ச்சியின் மீது பொறாமை படுகிறாரா என்பது எனக்கு தெரியவில்லை, ஆனால் நீங்கள் சொல்வது போல் அவருக்கு என் மீது பொறாமையாக கூட இருக்கலாம்” என்றும் கூறியுள்ளார்.

இதற்கு முன் தங்க தமிழ்ச்செல்வன், தான் நினைத்தால் தன்னால் பெரிய கூட்டம் ஒன்றை தனியாளாகவே சேர்க்கமுடியும் என்று கூறியிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் அவர் பல கட்சித் தலைவர்களை ரகசியமாக சந்திக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் பல செய்திகள் பரவி வந்ததும் குறிப்பிடத்தக்கது.   

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுத்த இளைஞர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. 22 ஆண்டு சிறை..!

மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு.. தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

ஏஐ மூலம் மாணவிகளின் படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்: ஐஐஐடியில் அதிர்ச்சி சம்பவம்!

2 நாட்களில் 35 பேர் நாய்க்கடியால் பாதிப்பு.. தென்காசி அருகே மக்கள் பதட்டம்..!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.. எந்த நாட்டு எழுத்தாளருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments