Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவோடு சேர்ந்து ஆட்சியைக் கலைப்போம் – தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம் !

Webdunia
செவ்வாய், 7 மே 2019 (13:48 IST)
தங்கள் கட்சியின் வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து திமுக வோடு சேர்ந்து இந்த ஆட்சியைக் கலைப்போம் என அமமுகவின் முக்கியத் தலைவர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

அமமுக அலுவலகத்தில் பணம் கைப்பற்றப்பட்டதாக கைது செய்யப்பட்டிருக்கும் வழக்கறிஞர் செல்வத்தைக் காண தேனி சிறைக்கு வந்த தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் அதிமுக ஆட்சியைக் கலைப்போம் எனக் கூறியுள்ளார்.

அதிமுக வின் பி டீம் என அமமுக வை அமைச்சர் ஜெயக்குமார் சொல்லி வருகிறாரே என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த தமிழ்ச்செல்வன் ‘ பி டீமாக இருந்தால் நாங்கள் ஏன் தனியாக தேர்தலில் நிற்க வேண்டும். கூட்டணி அமைத்து நின்றிருக்கலாமே. நம்பிக்கைத் தீர்மானம் கொண்டுவர 35 எம்.எல்.ஏக்கள் தேவை. 22 தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்று திமுகவோடு இணைந்து அதிமுக ஆட்சியைக் கலைப்போம். ஆனால் திமுகவுக்கு ஆட்சியமைக்க ஆதரவு கொடுக்கமாட்டோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன்: ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு.. புதிய அதிபராகிறார் முகமது முக்பர்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: ஊடகங்கள் அதிர்ச்சி தகவல்..!

சிபிஐ, அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்: அகிலேஷ் யாதவ் ஆவேச பேச்சு..!

ரூ.55,000ஐ தாண்டியது தங்கம் விலை.. ஒரு லட்சத்தை தாண்டியது வெள்ளி விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments