Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழிசையால் ஜோதிடர் வருமானம் பாதிப்பு. திருநாவுக்கரசு கிண்டல்

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2017 (23:59 IST)
தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் அரசியல் ரீதியாக கூறி வருவது அனைத்தும் பலித்து வருவதால் ஜோதிடர்கள் அவரை நினைத்து பயந்து போயிருப்பதாகவும், அவரால் ஜோதிடர்களின் வருமானம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு கிண்டல் செய்துள்ளார்.





இரட்டை இலை சின்னம் முடக்கம், ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து ஆகியவை குறித்து முன்கூட்டியே தமிழிசை செளந்திரராஜன் கூறியதுதான் நடந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், “தமிழிசை, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வேண்டும் என்று சொன்னார். அப்படியே நடந்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்துசெய்யப்பட வேண்டும் என்றார். அதுவும் பலித்துவிட்டது. இதனால், தமிழிசையைப் பார்த்து ஜோதிடர்கள், கேரள நம்பூதிரிகள் எல்லோரும் தங்கள் தொழிலுக்கு போட்டி வந்துவிட்டதாக பயந்துபோயிருக்கிறார்கள்.” என்று நக்கலாகக் கூறினார். திருநாவுக்கரசரின் இந்த கருத்துக்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments