Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்காம் தர அரசியல் செய்யும் தம்பிதுரை: ஓபிஎஸ் அணி ஆவேசம்!

நான்காம் தர அரசியல் செய்யும் தம்பிதுரை: ஓபிஎஸ் அணி ஆவேசம்!

Webdunia
திங்கள், 26 ஜூன் 2017 (18:14 IST)
அதிமுகவின் ஓபிஎஸ் அணியை சேர்ந்த கே.பி.முனுசாமி மக்களவை துணை சபாநாயகர் அதிமுகவை சேர்ந்த எம்பி தம்பிதுரை நான்காம் தர அரசியல் செய்வதாக கடுமையாக சாடியுள்ளார்.


 
 
நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தது அதிமுகவின் மூன்று அணிகளும். இதனையடுத்து டெல்லியில் இதுகுறித்து பேட்டியளித்த தம்பிதுரை, பாஜகவுக்கு ஆதரவு அளித்தது தலைமைக்கழகம் எனவும், சசிகலாம் தினகரனின் ஆசியோடு ஆதரவு அளிக்கப்பட்டது எனவும் கூறினார்.
 
தம்பிதுரையின் இந்த பேட்டிக்கு ஏற்கனவே அதிமுகவின் எடப்பாடி அணியில் உள்ள எம்பிக்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஓபிஎஸ் அணியில் உள்ள கே.பி.முனுசாமியும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து கூறிய அவர், தம்பிதுரை கட்சி தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். அவர் நான்காம் தர அரசியல் செய்வதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இரண்டு அணிகளும் இணைந்தால் தற்போது இருக்கிற வாழ்வு கிடைக்காது என்பதால் தினகரன், ஜெயக்குமார், சசிகலா, திவாகரன் ஆகியோர் மறைமுகமாக செயல்படுகின்றனர்.
 
மேலும் தங்களிடம் பாஜக தலைவர் அமித்ஷா ஆதரவு கேட்டதால் அவர்களுக்கு ஆதரவு அளித்தோம் என கூறினார்.

ஆர்.எஸ்.எஸ். அழைத்தால் சென்றுவிடுவேன்: ஓய்வு பெறும் நாளில் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி!

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று முதல் 26ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு..!

இலங்கை சீதை கோயிலில் மகா கும்பாபிஷேகம்: இந்தியாவிலிருந்து சென்ற சீர்வரிசைகள்..!

ஜூன் 4ஆம் தேதிக்கு பின் ராகுல் காந்தி ஒரு யாத்திரைக்கு செல்வார்.. அமித்ஷா கிண்டல்..!

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: பாஜகவின் 2 பிரபலங்கள் ஆஜராக சிபிசிஐடி சம்மன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments