Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்ட பாலம்: தமிழக அரசு அரசாணை

Webdunia
புதன், 5 ஜூலை 2023 (14:12 IST)
சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க தமிழக அரசு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. 
 
சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் இருந்து சைதாப்பேட்டை வரை மூன்றுக்கும் மேற்பட்ட சிக்னகள் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாகவும் இதனை அடுத்து உயர் மட்ட பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. 
 
இந்த நிலையில் அண்ணாசாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூபாய் 621 கோடி பட்ஜெட்டில் புதிய பாலம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது 
 
இந்த உயர்மட்ட பால திட்டத்திற்கு தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர் மட்ட பாலம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்து நெரிசல் விரைவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 திருமணமும் தோல்வி.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்.. இளம்பெண்ணை கொலை செய்த அப்பா - மகன்..!

என் பிணத்தை நானே என் கண்ணால் பார்த்தேன்.. 8 நிமிடங்கள் இறந்து பின் உயிர் பிழைத்த பெண் பேட்டி..!

கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார்.. குடும்பத்தையே விஷம் கொடுத்து கொல்ல முயன்ற பெண்.. அதிர்ச்சி சம்பவம்..!

தென்னிந்தியர்கள் பொதுவான மொழியாக இந்தியை ஏற்று கொள்ள வேண்டும்: சந்திரபாபு நாயுடு

ParleG பிஸ்கட்ல இருக்க பொண்ணு நான்தான்! இழப்பீடு கொடுக்கணும்! - பகீர் கிளப்பிய பீகார் சிறுமி!

அடுத்த கட்டுரையில்
Show comments