Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பராமரிப்புப் பணிகளுக்காக ஜவுளி மற்றும் நகைக்கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்… வியாபாரிகள் கோரிக்கை!

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (08:32 IST)
கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக நகை மற்றும் ஜவுளிக்கடைகள் 50 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் இது சம்மந்தமாக ஜவுளி, நகைக் கடை வியாபாரிகள் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம், நேற்று நடந்தது. அந்த கூட்டத்தில் ‘திருமண நிகழ்வுகளுக்கு அரசு அனுமதித்துள்ள நிலையில் அதற்கான ஜவுளி மற்றும் நகைகள் வாங்க வேண்டிய சூழல் மக்களுக்கு உள்ளது. அதனால் கடைகள் திறக்க அனுமதி அளிக்க வேண்டும்.  ஜவுளி, நகைக் கடை கட்டிடங்களுக்கு 6 மாதங்களுக்கான சொத்து வரி, குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியை ரத்து செய்ய வேண்டும். 50 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள நிலையில் பராமரிப்புப் பணிகளுக்காக ஜூன் 24 முதல் 27-ம் தேதி வரை, காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறக்க அனுமதிக்க வேண்டும்.’ என ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் உல்லாச குளியல் ஆடும் சிறுவர்கள்

அடுத்த கட்டுரையில்