சி.ஏ.ஏ எதிர்ப்பு என்ற பெயரில் பயங்கரவாதிகள் போராட்டம் - ஹெச். ராஜா குற்றச்சாட்டு

Webdunia
புதன், 29 ஜனவரி 2020 (13:34 IST)
தமிழகம் முழுவதும் சிஏஏ எதிர்ப்பு என்ற பெயரில் பயங்கரவாதிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் திருச்சி மாவட்டம் கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர் விஜயராகுவின் இல்லத்திற்கு பாஜக தேசிய செயலர் ராஜா சென்று அவரது, குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதுடன், ரூ.50,000 நிதி உதவி வழங்கினார்.
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  அவர் கூறியதாவது :
 
தமிழகம் முழுவதும் சிஏஏ ( இந்திய குடியுரிமை திருத்த சட்டம் ) என்ற பெயரில் பயங்கரவாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தான் விஜயராகு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.
 
மேலும், இந்தக் கொலை விவகாரத்தில் மதப் பிரச்சனை இல்லை என ஐஜி அமல்ராஜ் கூறிய கருத்தில் தனக்கு திருப்தி இல்லை என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SIR படிவத்தை முழுமையாக நிரப்பாவிட்டால் நிராகரிக்கப்படுமா? தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்..!

5 வயது சிறுமியை கடத்தி ரூ.90,000க்கு விற்பனை.. கடத்தியவர் யார் என்பதை அறிந்து பெற்றோர் அதிர்ச்சி..!

என் தந்தை உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை காட்டுங்கள்.. இம்ரான்கான் மகன் ஆவேச பதிவு..!

இறங்கிய வேகத்தில் திடீரென உயர்ந்த தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 560 ரூபாய் உயர்வு..!

வாரத்தின் கடைசி நாளிலும் பங்குச் சந்தை உயர்வு.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments