Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திம்பம் மலைப் பகுதியில் நிரம்பி வழியும் தடுப்பணைகள்

Webdunia
செவ்வாய், 23 டிசம்பர் 2014 (12:49 IST)
திம்பம் வனப் பகுதியில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக வனப் பகுதிக்குள் இருக்கும் தடுப்பணைகளில் தண்ணீர் நிரம்பி வழிந்தோடுகிறது. இதனால் வன விலங்குகளுக்கு தண்ணீர் பிரச்சனை தீர்ந்துள்ளது.



 
ஈரோடு மாவட்டம் பண்ணாரியில் இருந்து வனப் பகுதி தொடங்குகிறது. இந்த வனப் பகுதி திம்பம், ஆசனூர், தலமலை, தாளவாடி என நீண்டுகொண்டே சென்று கர்நாடகா வனப் பகுதியில் இணைகிறது.
 
இந்த வனப் பகுதியில் காட்டுயானைகள், சிறுத்தை, புலி, கழுதைபுலி, காட்டெருமை, கரடி, மான் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகமாக வாழ்ந்து வருகிறன.
 
இந்த வன விலங்குகளுக்குத் தண்ணீர் பிரச்சனைக்கு வனப் பகுதியில் ஆங்காங்கே வனத்துறையினர் தடுப்பணைகளைக் கட்டி வைத்துள்ளனர்.
 
இது தவிர பண்ணாரி அம்மன் ஃரூரல் பவுண்டேசன் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வனப் பகுதியின் ஓரத்தில் வனஓடைகளைத் தடுத்து தடுப்பணை கட்டிவைத்துள்ளனர். இதில் தேங்கும் தண்ணீர் இப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பெரும்பயனாக இருந்து வருகிறது.
 
இந்நிலையில், கடந்த சில மாதங்களில் பெய்த மழையால் காய்ந்து கிடந்த தடுப்பணைகளில் தண்ணீர் நிரம்பி வழிந்தோடும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
இதனால் வன விலங்குகளின் தண்ணீர் பிரச்சனைக்குத் தீர்வு ஏற்பட்டுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments