Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெண்டர் ஒதுக்கியதில் அதிமுக அணிகளுக்கு இடையே பிரச்சனை: இணைப்பு நடந்த மாதிரி தான்!

டெண்டர் ஒதுக்கியதில் அதிமுக அணிகளுக்கு இடையே பிரச்சனை: இணைப்பு நடந்த மாதிரி தான்!

Webdunia
சனி, 27 மே 2017 (10:11 IST)
அதிமுக இரு அணிகளும் இணைய வேண்டும் என இரு அணியினரும் கூறி வருகின்றனர். ஆனால் இணைப்பு நடந்த மாதிரி இல்லை. பல்வேறு காரணங்கள், கோரிக்கைகளால் இணைப்பு பேச்சுவார்த்தை நடக்காமலே உள்ளது.


 
 
இந்நிலையில் டெண்டர் ஒன்று ஒதுக்கியதில் சசிகலா அணியை சேர்ந்தவர்கள் ஓபிஎஸ் அணியை சேர்ந்த கே.பி.முனுசாமி ஆதரவாளரை ஈபிஎஸ் அணியினர் புறக்கணித்தது இணைப்பு பேச்சுவார்த்தையை இன்னும் தூரமாக்கியுள்ளது. இதற்கு காரணம் தம்பிதுரையின் வேலைகள் எனவும் கூறப்படுகிறது.
 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக அரசின் தாய் திட்டத்துக்கு 100 கோடி ரூபாயை ஒதுக்கினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதன் டெண்டர் ஆன் லைனில் நடைபெற்றது. இதற்கு ஓபிஎஸ் அணியை சேர்ந்த கே.பி.முனுசாமியின் ஆதரவாளர் டெண்டர் கோரியிருந்தார்.
 
ஆனால் கடந்த 25-ஆம் தேதி கே.பி.முனுசாமியின் ஆதரவாளர்களின் டெண்டர்களை நீக்கிவிட்டு, சசிகலா அணியினருக்கு 60% வேலையும், திமுகவினருக்கு 30% வேலையும், கட்சியில்லாத ஒப்பந்தக்காரர்களுக்கு 10% வேலையும் பிரித்துக்கொண்டார்கள்.
 
தம்பிதுரையின் வேலையால் தான் இந்த டெண்டர் கிடைக்கவில்லை என கொந்தளித்த கே.பி.முனுசாமி இந்த நிலமையில் இணைப்பு பேச்சுவார்த்தை எங்கே நடக்கப்போகிறது என கூறியதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments