Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தற்காலிக ஆசிரியர் பணிக்கு 1.5 லட்சம் பேர் விண்ணப்பம்!

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (15:38 IST)
தற்காலிக ஆசிரியர் பணிக்கு 24 மாவட்டங்களில் 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல். 

 
தமிழ்நாட்டில் தற்காலிக ஆசிரியர் பணியில் சேர தகுதி வாய்ந்தோர் விண்ணப்பிக்க நேற்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. நேற்று மாலை 5 மணி வரை தற்காலிக ஆசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்களை நேற்று இரவு 8 மணிக்குள் கல்வி அனைவருக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. 
 
இந்நிலையில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு 24 மாவட்டங்களில் 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. ஒரு நபரே பல பள்ளிகளில் பணியாற்ற விண்ணப்பித்துள்ளதால் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
மேலும் அரசுப் பள்ளிகள் கல்லூரிகளில் 10571 காலிப்பணியிடங்களை நிரப்ப ஆண்டு அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள இடைநிலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு செப்டம்பரில் வெளியிடப்படும் டிசம்பரில் தேர்வு நடத்தப்படும் என தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோதனை ஓட்டம் வெற்றி! டிசம்பரில் வருகிறது புதிய மெட்ரோ ரயில் சேவை! - சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

அதிரடியில் இறங்கிய காவல்துறை! ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை சுட்டுப் பிடித்த போலீஸ்! - சென்னையில் பரபரப்பு!

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments