Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலை சீசனை முன்னிட்டு தற்காலிக கடைகள்: திமுக எதிர்ப்பு தெரிவித்ததால் ஏலம் ரத்து..!

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2023 (07:45 IST)
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் சபரிமலை ஐயப்பன் சீசன் தொடங்கும் போது கன்னியாகுமரியில் பல தற்காலிக கடைகள் அமைக்கப்படும். மாநிலம் முழுவதிலும் இருந்து கன்னியாகுமரி வழியாக ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் இந்த தற்காலிக கடைகள் அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த ஆண்டும் கன்னியாகுமரியில் தற்காலிக கடைகளை ஏலம் விடும் விவகாரத்தில் திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி தலைவரை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் ஏலம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.  

கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற  கூட்டத்தில் 350 தற்காலிக கடைகளை ஏலம் விட பேரூராட்சி தலைவர் முன் வந்த போது  மொத்த கடைகளையும் இரண்டு பேர் மட்டுமே ஏலம் எடுத்து கைமாற்றி விடுவதாகவும்  திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஏலம் விடுவது ரத்து செய்யப்பட்டு ஒரு வாரம் ஆகியும் தீர்மான புத்தகத்தில் அதை பதிவு செய்யவில்லை என்பதால்  திமுக கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments