Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயனில்லாமல் இருக்கும் 2000 கிலோ தங்கம்: அமைச்சர் சேகர்பாபுவின் அதிரடி திட்டம்

Webdunia
செவ்வாய், 27 ஜூலை 2021 (07:50 IST)
கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த சுமார் 2,000 கிலோ தங்கம் பயன் இல்லாமல் இருப்பதாகவும் அதனை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்
 
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் பணம் மட்டுமின்றி தங்கம் வெள்ளி போன்ற பொருள்களையும் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் காணிக்கையாக வந்த தங்கம் மட்டும் சுமார் 2,000 கிலோ இருப்பதாகவும் அந்த தங்கம் பயன் இல்லாமல் இருப்பதை அடுத்து அதனை பயன்படுத்த முடிவு செய்திருப்பதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார் 
 
தமிழக கோவில்களில் இருந்து காணிக்கையாக கிடைத்த 2000 கிலோ தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்து அதன் மூலம் வரும் வட்டித் தொகையை கோயில்கள் சீரமைப்பு பணிகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டு உள்ளோம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஆதார் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு.. இன்னும் 4 நாட்கள் தான்..!

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments