Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவில் நகைகளை தங்கக்கட்டிகளாக மாற்றும் பணி தொடக்கம்!

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (19:13 IST)
தமிழகத்தில் உள்ள கோவில்களில் கோவில் பயன்பாட்டுக்கு போக மீதமுள்ள நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் என ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்திருந்தது. 
 
அந்த வகையில் 3 கோவில்களில் உள்ள பயன்பாடற்ற பலமாற்ற தங்கங்களை 24 காரட் தங்க கட்டிகளாக மாற்றுவதற்கான பூர்வாங்க பணிகளை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார் 
 
திருவேற்காடு சமயபுரம் இருக்கன்குடி ஆகிய இடங்களில் உள்ள திருக்கோயில்களில் உள்ள பயன்பாடற்ற நகைகளை 24 காரட் நகைகளாக மாற்றும் பூர்வாங்க பணிகள் இதனை அடுத்து தொடங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
திருக்கோயில்களில் இறைவன் இறைவி ஆகிய சிலைகளுக்கு கவசங்கள் மற்றும் கிரீடங்கள் செய்வதற்கான தேவை எழுந்தால் வங்கிகளில் முதலீடாக வைக்கப்பட்டுள்ள தங்க கட்டிகள் திரும்ப பெறப்பட்டு பயன்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments