Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் அருகே டாஸ்மாக் கடைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (08:40 IST)
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள கொளத்தூரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மர்ம நபர்கள் தீவைத்தனர்.
 
மதுவுக்கு எதிராகப் போராடிய சசி பெருமாள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மதுவிலக்குப் போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது.
 
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினர், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
நேற்று, சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி நடத்திய போராட்டத்தின்போது காவல்துறையினர் அந்த மாணவர்கள் மீது தடியடி நடத்தினர்.
 
இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், மற்றும் அமைப்புகளின் ஆதரவுடன் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.
 
இந்நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள கொளத்தூரில் செயல்பட்டு வந்த அரசு மதுபானக்கடைக்கு மர்மநபர்கள் தீவைத்தனர்.
 
இதனால், அந்தக் கடையில் இருந்த சுமார் 15 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்கள் நாசமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

Show comments