Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான நிலையத்தில் திடீரென தரையில் உட்கார்ந்து தர்ணா நடத்தும் முன்னாள் முதல்வர்!

Webdunia
திங்கள், 1 மார்ச் 2021 (13:59 IST)
திடீரென தரையில் உட்கார்ந்து தர்ணா நடத்தும் முன்னாள் முதல்வர்!
முன்னாள் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு ரெட்டி திடீரென விமான நிலையத்தில் தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
திருப்பதி விமான நிலையத்திற்கு இன்று சென்ற ஆந்திர முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு திடீரென விமான நிலையத்தில் அவர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்துகிறார்
 
ஆந்திராவில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில் அதில் போட்டியிடவுள்ளதாக தெலுங்கு தேச கட்சியை சேர்ந்தவர்களை மனுக்களை வாபஸ் பெறுமாறு ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தொல்லை கொடுப்பதாகவும் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு ஏற்கனவே தெரிவித்திருந்தார் 
 
இதுகுறித்து திருப்பதி மற்றும் சித்தூரில் போராட்டம் நடத்த சந்திரபாபு நாயுடு திருப்பதி விமான நிலையத்திற்கு வந்தார். ஆனால் அவரை விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல விடாமல் போலீசார் தடுத்தனர். இதனையடுத்து போலீசார் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து விமான நிலையத்திலேயே தரையில் உட்கார்ந்து சந்திரபாபு நாயுடு தர்ணா போராட்டம் செய்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments