Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புயல் பாதிப்பு எதிரொலி: பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2023 (07:24 IST)
புயல் பாதிப்பு காரணமாக பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

2023 - 24 ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் புயல் மற்றும் கனமழை காரணமாக இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க கால அவகாசத்தை ஒரு வாரம் நீடித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் இதுகுறித்து வெளியிட்டுள்ள உத்தரவில் டிசம்பர் 13ஆம் தேதி வரை இந்த காலி பணியிடங்களுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.  

கால அவகாசம் கேட்டு பலருக்கு கோரிக்கை வைத்ததை வைத்து இந்த அறிவிப்பு வெளியிட்டு இருப்பதாகவும்  டிசம்பர் 14ம் 15ஆம் தேதிகளில் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டிருப்பதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திரைப்படங்களில் போலிஸ் வன்முறையை கொண்டாடுபவர்கள் இப்போது ஏன் கவலை கொள்கிறார்கள்?": விஜய்க்கு கனிமொழி மறைமுக கேள்வி..!

இதைத்தான் எதிர்பார்த்தோம்.. விஜய் செய்வது நாகரீக அரசியல்: பத்திரிகையாளர் மணி

போரை நிறுத்தாவிட்டால் 100% வரி.. ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை.. புடின் பதில் என்ன?

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments