Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லா சனிக்கிழமையும் ஸ்கூல் வெக்க வேண்டாம்! – ஆசிரியர்கள் வேண்டுகோள்!

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2021 (14:06 IST)
கொரோனா தளர்வுகளை தொடர்ந்து பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் நடத்த வேண்டாம் என ஆசிரியர் சங்கத்தினர் அமைச்சரிடம் மனு அளித்துள்ளனர்.

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளன. தற்போது 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடந்து வரும் நிலையில் விரைவில் 1 முதல் 8 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா காரணமாக நீண்ட காலமாக மூடப்பட்டிருந்ததால் பாடங்களை நடத்த சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பணி சுமை அதிகரிப்பதாக அமைச்சர் செங்கோட்டையனுக்கு அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்கள் மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளை விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments