எல்கேஜி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்!
எல்கேஜி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்!
ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படிக்கும் 4 வயது சிறுமிக்கு அந்த பள்ளியில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பவானியில் உள்ள தனியார் பள்ளியில் பல மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அங்கு எல்கேஜி படித்து வந்த 4 வயது சிறுமி ஒருவர் கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் பள்ளிக்கு போகாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
இது குறித்து சிறுமியிடம் அவளது பெற்றோர்கள் விசாரித்த போது அந்த பள்ளியில் பணிபுரிந்து வரும் செந்தில் என்ற உடற்கல்வி ஆசிரியர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததையும், தவறாக நடந்ததையும் கூறியுள்ளார் சிறுமி.
இதனையடுத்து உடற்கல்வி ஆசிரியர் செந்தில் மீது காவல்துறையில் புகார் அளித்தனர் சிறுமியின் பெற்றோர்கள். உடனே அந்த பள்ளிக்கு சென்ற போலீசார் ஆசிரியர் செந்திலை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.