மலம் அள்ள சொல்லி ஒடுக்கப்பட்ட மாணவனை துன்புறுத்திய ஆசிரியை – 5 ஆண்டு சிறை !

Webdunia
வெள்ளி, 10 ஜனவரி 2020 (16:37 IST)
நாமக்கல்லில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தலித் மாணவனை மலம் அள்ள சொன்ன நடுநிலைப் பள்ளி ஆசிரியைக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் எஸ்.வாழவந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் நடுநிலைப் பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி. இவர் ராமபுரத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணி புரிந்து வந்தார்.  இவர் மீது கடந்த 2015 ஆம் ஆண்டு பள்ளியில் படிக்கும் ஒடுக்கப்பட்ட மாணவர் ஒருவரை மலம் அள்ள சொல்லி வற்புறுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

மாணவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் நடந்த இந்த வழக்கில் நாமக்கல் எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பளித்துள்ளது.விஜயலட்சுமிக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நிமிடத்திற்கு ரூ. 8 கோடி இழப்பு! பெரும் இழப்பை சந்திக்கும் துபாய்.. என்ன காரணம்?

10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமா?

ஓமன் எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்.. கொழுந்துவிட்டு எரியும் கப்பல்.. 15 இந்திய ஊழியர்களின் கதி என்ன?

அமெரிக்காவின் முக்கிய பிரமுகர் தவெகவில் இணைகிறாரா? செங்கோட்டையன் சொன்னது என்ன?

பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழக மண் பாஜகவுக்கு இடமளிக்காது: செல்வபெருந்தகை

அடுத்த கட்டுரையில்
Show comments