மலம் அள்ள சொல்லி ஒடுக்கப்பட்ட மாணவனை துன்புறுத்திய ஆசிரியை – 5 ஆண்டு சிறை !

Webdunia
வெள்ளி, 10 ஜனவரி 2020 (16:37 IST)
நாமக்கல்லில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தலித் மாணவனை மலம் அள்ள சொன்ன நடுநிலைப் பள்ளி ஆசிரியைக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் எஸ்.வாழவந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் நடுநிலைப் பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி. இவர் ராமபுரத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணி புரிந்து வந்தார்.  இவர் மீது கடந்த 2015 ஆம் ஆண்டு பள்ளியில் படிக்கும் ஒடுக்கப்பட்ட மாணவர் ஒருவரை மலம் அள்ள சொல்லி வற்புறுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

மாணவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் நடந்த இந்த வழக்கில் நாமக்கல் எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பளித்துள்ளது.விஜயலட்சுமிக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

28 புதிய ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர்..! எத்தனை கோடி மதிப்பு?

நள்ளிரவில் வீடு வீடாக சென்று உதவி செய்யுங்கள் என்ற கூச்சலிட்ட பெண்.. பொதுமக்கள் அச்சம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments