Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’காதலிக்க மாட்டாயா....?? ஒருதலைக்காதலில் மாணவியை கத்தியால் குத்திய ஆசிரியர் ....

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (21:36 IST)
கோப்புப்படம்

 
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த பேரசிரியர் ஒருவர் ஒருதலைக்காதலால் ஒரு மாணவியைக் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது.  இங்கு சிந்தாமணி பகுதியில் வசித்துவரும் நாகராஜன் என்பவரின் மகள்( 18 வயது)  தோட்டக்கலை முதலாம் ஆண்டு படித்துவருகிறார்.

இவர் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கிப் படித்துவந்த நிலையில் நேற்று மாலை ஏடிஎம்-ல் பணம் எடுப்பதற்காக விடுதிக்கு வெளியே வந்திருக்கிறார்.

அப்போது அவரை நெருங்கிய ஒரு இளைஞர் அவரை திட்டி என்னைக் காதலிக்க மாட்டாயா என்று கூறி  பேனாக் கத்தி கொண்டு அப்பெண்ணின் கழுத்து மற்றும்கையில் கிழித்துள்ளார்.

பின்னர் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸர் விசாரித்து வந்தனர்.

அதில், மாணவியைக் கத்தியால் குத்தியவர் சேவியர்(30) இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியபோது,   அப்பளியில் அந்த மாணவியை படித்திருக்கிறார். அந்தப்பழக்கத்தில் என்னைக் காதலிக்க மாட்டாயா என்று கேட்டி கத்தியால் குத்தியது தெரியவந்துள்ளது.

இதையடுத்து சேவியர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments