Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழிலாளர்களுக்கு இலவச அரிசி, பருப்புகள் கொடுத்து உதவிய ஆசிரியர் !!

Webdunia
சனி, 9 மே 2020 (20:54 IST)
இலாலாபேட்டையில் அரசுபள்ளி ஆசிரியரின் தாராள உள்ளம் – கட்டிடத் தொழிலாளர்கள் மற்றும் டீக்கடை தொழிலாளர்களுக்கு இலவச அரிசி,  பருப்புகள் கொடுத்து உதவினார்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், இலாலாபேட்டை, மெயின்ரோடு பகுதியில் வசிப்பவர் தங்கராஜ், இவரது இரண்டாவது மகன் த.யக்னமூர்த்தி (வயது 39), இவர், திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோயில்  அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை புவியியல் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார்.

இந்நிலையில், கொரோனாவினால் வாழ்வாதாரம் இழந்துள்ள இலாலாபேட்டை பகுதியினை சார்ந்தவர்களுக்கும், அவருடைய நண்பர்கள் மற்றும் ஏழை, எளியவர்கள் என்று பலருக்கும்  ஏற்கனவே அரிசி மற்றும் பருப்பு வகைகளை கொடுத்த நிலையில், மூன்றாவது முறையாகவும் கொரோனா எதிரொலியின் காரணமாக வாழ்வாதாரம் இழந்துள்ள கட்டிடத் தொழிலாளர்கள், மேஸ்திரி, சித்தாள் மற்றும் டீக்கடை தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என்று சுமார் 8 நபர்களுக்கு தலா 10 கிலோ அரிசிகளும், ¼ கிலோ துவரம்பருப்பு, 100 கிராம் புளி, மிளகாய் தூள், மல்லித்தூள் உள்ளிட்ட மளிகை பொருட்கள் கொடுக்கப்பட்டது. கொரோனா நிவாரணமாக கொடுத்த இவரது செயல்களை கண்டு அப்பகுதி மக்களும், அவருடைய மாணவர்களும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments